17 November 2006

வாஷிங் மெஷினும், மனுஷனும்!!

வீட்டில் தாய்குலத்துக்கு உதவி செய்ற, செய்யச்சொல்ற முற்போக்குவாதிகளே, வணக்கம்!

ஒரு தடவை, ஒரே ஒரு தடவை இந்த வாஷிங் மெஷின் வாஷிங் மெஷின்னு ஒரு புயலையொத்த கருவி இருக்கே, அத நல்ல படியா ஓட்டிக் காட்டிருங்க, என் வாழ்நாள் பூராவும், பெண் விடுதலை சம உரிமைன்னு பேசி, பெரும்பணி செய்ய சபதமெடுக்கறேன்!!
வேல செஞ்சவங்களுக்கு, இதப் படிச்சா ஆறுதல், 'சரி, நம்மள மாதிரி அப்பிராணி இன்னொருத்தனும் இருக்கான்'ன்னு; இனி செய்யப் போறவங்களுக்கு தங்களை தாங்களே காப்பாதிக்க 'டிப்ஸ்' :-

முதல்ல மெஷினோட ஆதி அந்தம் புரிஞ்சுக்கிறது நல்லது! முதல்ல அது தண்ணிய எப்படி உள் வாங்கும், எப்படி வெளியே துப்பும்னு தெரிஞ்சு வெச்சுக்கங்க!! அப்புறம் என்ன லோடிங், என்னன்ன துணிகள் எதோடு சேர்த்து போடணும், போடக்கூடாது, இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். எந்த சுவிச்சத் தொட்டா உள்ளே என்ன நடக்கும்னு தெரிஞ்சு வெச்சுக்கணும்.

சரி, ஒரு நாள் நாமதான் லீவுல நாளாச்சே, கொஞ்சம் பொண்டாட்டிக்கு உதவி செய்யலாம்னு போனேன். முதல்ல என் துணிங்க; பேண்ட் எல்லாம் எடுத்து, இடுப்புப் பட்டி, பாக்கெட், அப்புறம் சட்டை காலர்,க·ப் - எங்கெங்கெல்லாம் அழுக்குப் படியுமோ, அங்கெல்லாம் 'க·ப் அண்ட் காலர்' னு ஒரு திரவம்; அத தடவி நல்லா தேய்ச்சா, அழுக்கு போயிரும்னு சொன்னாஅருமை மனைவி; தேய்ச்சேன்; கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்னு தோணிச்சு! ஒரேடியா, துணி திரிஞ்சு பிஞ்ச மாதிரி இருந்தது! எதுக்கு வேணாம்னு, அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்கிட்டேன். அடுத்து சார்ட்டிங் (Sorting) - நம்ம நல்ல உருப்படின்னு எதெல்லாம் எடுத்து வெக்கிறோமோ, அதெல்லாம் நம்ம வீட்டம்மாவுக்கு, செகண்ட் சாய்ஸா தெரியுது!!

வெள்ளை அயிட்டமெல்லாம் தனியா, கலர் தனியா, பெண்டாட்டி சேலைகள் தனியா, உள்ளாடைகள், உரைகள், விரிப்புங்க தனியான்னு, ஒரு எக்ஸ்பர்ட் வண்ணான் தோத்த மாதிரி தனிப்படுத்தி வெச்சேன்!

அங்கிருந்து வந்தது எதிர்ப்பு - ''ஏங்க? உங்க பேண்ட் சட்டையோட என் சேலைங்களப் போட்டுறாதீங்க! கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தமே, அந்த பட்டுப்புடவையை 'ஸா·ப்ட் மோட்' ல போடணும்; வெள்ளைங்கள தனியா 'பவர் வாஷ்ல, ப்ளீச்சோட' போடணும்; அப்புறம் மீதி உங்க செளரியம்'' ன்னா!

மீதி? உரைங்க, விரிப்பு, என் துணிங்க! அதெல்லாம் ஒரு ரவுண்டு! இது எப்படியிருக்கு?

அம்மா- ''குழந்தைங்க துணி, எந்துணிங்களத் தொடாத; அத பூப்போல, அலசிப் போடணும்; கொஞ்சம் டெட்டால் துளி விட்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான சுடுதண்ணில அலசி, அப்புறம் தொவச்சா, குழந்தைங்களுக்கு இதமா இருக்கும், இன்·பெக்ஷன் வராது''
பையன் - ''அப்பா, என் ராம்பொ ரெமோ விக்ரம் பேண்ட அம்மாவக் கேட்டுதொடுங்கப்பா, அவங்களுக்குத் தான் அதப் பத்தித் தெரியும்; உங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாதுப்பா'
வேற யாரும் பாக்கியான்னு சுற்றிப் பார்த்தேன்;

நல்ல வேளை- குட்டிப்பொண்ணுக்கு 5 மாசம்தான் ஆகுது; அது கூட என்னப் பார்த்து-'ஆங்' னு ஒரு சவுண்டு விடுது!! எல்லாம் நேரம்! சரின்னு, ஒரு வழியா எல்லாத்தையும் தரம் பிரிச்சு, போட்டாச்சு;

மெஷின் ஓட ஆரம்பிச்ச 10 நிமிஷத்துக்குள், 'கர்'னு சத்தம்; ஓடிப்போய் பார்த்தா, மெஷின் சுத்தி ஒரே தண்ணி!! மனைவி பின்னேயே வந்து - 'சொல்ல மறந்துட்டேன்; பைப் சரியா ட்யூபோட சேர்றது இல்ல. கொஞ்சம், தண்ணி ப்ரெஷர் அதிகமானா, லீக் ஆயிரும்!'' அப்படீன்னா! சரின்னு போயி உட்கார்ந்தா, அம்மா வந்து - `ஏண்டா, வயசானவங்களோ, பிள்ளைங்களோ தடுக்கி விழுந்தா என்னடா பண்றது? போயி அந்த தண்ணியெல்லாம் தொடச்சுடு' ன்னாங்க; சரின்னு போனேன்! குனிஞ்சு, தென்ன வெளக்குமாத்தால தள்ளிவிடுறச்ச, திடீர்னு, முதுகுல ஒரு 'லோடு'. பையன்! "ஹை! அப்பா, உப்பு மூட்ட தூக்குங்கப்பா" "இருடா, தண்ணிய தொடச்சிட்டு வரேன்.'' பையன் காது கொடுத்துக் கேட்டதா தெரியல! மீண்டும் வந்து குதிச்சான்; கடுப்புல, நிமிர்ந்தேன்; பட்டுனு கீழ விழுந்துட்டான். எந்திரிக்கப் போனவன் ஈரம் வழுக்கி விழுந்துறப் போறானேன்னு, தாவிப் பிடிக்கலாம்னு பாய்ஞ்சேன்; பிடிக்கப்போனப்ப, தண்ணி ஹோசைப் பிடிச்சு இழுத்துட்டேன் போல!! பிய்ச்சுகிட்டு வந்திரிச்சு! சர்னு தண்ணி பாய்ஞ்சு, கிச்சனெல்லாம் தண்ணி! அடிச்சதுல நேரா என் மூஞ்சில அடிச்சு, மீதி? தரையெல்லாம் தடாகம்!

ஒரு வழியா முகத்தத் தொடச்சு, எந்திரிக்கலாம்னா, முன்ன இருந்ததை விட அதிகமா தண்ணி தேங்கிருச்சு! பையனையும் தூக்கிகிட்டு அதுல மெதுவா அன்ன நடை நடந்து வெளிய வந்தா, பொண்டாட்டி எதிர்ல நிக்கிறா! ' ஒரு வேல ஒழுங்கா செய்யத் தெரியாதே' ங்கிற மாதிரி ஒரு லுக் விட்டா! சரி, மீண்டும் துடப்பக் கட்டை, துடைத்தல் படலம் ஆச்சு! முடிஞ்சுதா? ஒரு வழியா முடிச்சு மீண்டுறலாம்னு பார்த்தா, திடீர்னு வாஷிங் மெஷின் 'சாமி' ஆடிச்சு! மீண்டும் பொண்டாட்டி முகத்தப் பார்த்தேன்! போங்கப்பா- 'ஆடு திருடின..' ங்கிற பழமொழியெல்லாம் ஞாபகப்படுத்தாதீங்கப்பா! ''கீழ ரோலர் இருக்கு பார்த்தீங்களா? அதோட ஸ்டாப்பரை எடுத்துவிட்டுட்டா, மெஷின் ஆடாது, நிக்கும் ; இதுதெரியலையே'' ன்னு சொல்லிட்டு, அத சரிசெஞ்சா;

மெஷின் ஒரு ஆட்டம் போட்டு முடிஞ்சுது!

பொண்டாட்டி துணிங்க முதல் ரவுண்ட் முடிஞ்சு, அம்மா, குழந்தைகளோடது ஆரம்பிச்சது. கம்பவுண்டர் தோத்தான் போங்க! அப்படி கரெக்டா டெட்டால் அளவெடுத்து, சேர்த்து, துணிங்களை வெந்நீரில் வளாவி, மீண்டும் மெஷினுக்குள்ள போட்டேன். அடுத்த ரவுண்ட் ஓவர்.

''என்ன பாவா, சவுக்கியமா'' ன்னு கேட்டுகிட்டே என் மச்சான் எதிரில் வந்தான்? மனசுல திகில் பரவறதுக்கு முன்னமே, அவனே, '' பாவா, சாயங்காலம் கோவில்ல கச்சேரி கேக்கணும்; போயிடுவேன்! சரி,லீவாச்சே அக்காவையும், உங்களையும் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்!'' ங்கிறான்.

மனைவியோ, ''ஏங்க, அதான் கிச்சாவும் வந்துருக்கான். இந்த தண்ணி பைப் ரிப்பேரை ரெண்டு பேருமா பார்த்து முடிச்சுடுங்களேன்'' ன்னா. மச்சினனும், ஆர்வமாய் குழாயும் ஹோசுமாய் இணையும் இடத்தில் ஒரு பார்வை வீசிவிட்டு, '' சிம்பிள் பாவா. ஜஸ்ட் ப்·யூ மினிட் ஜாப். ஒரு பிலிப்ஸ் ஹெட் ஸ்க்ரூ டிரைவர், கொஞ்சம் எம் சீல், துடைக்கத் துணி இதெல்லாம் எடுங்க!'' ன்னான். என்ன கடையா வெச்சிருக்கேன்? சட்டைய மாட்டிகிட்டு கடைக்குப் போயிட்டு வந்ததுல, அவுட் ஒரு 50 ரூபாய்! மச்சான், கைய வெச்சான்!

" பாவா, தண்ணிய மூடுங்க. இப்ப, மெதுவா, தண்ணியே இல்லாதபடி துடைச்சுடுங்க; அப்புறம் எம் சீல் ஒட்டாது, சொல்லிட்டேன். ஓகே, இப்ப அந்த ஸ்க்ரூ டிரைவரால 4 ஸ்டார் ஸ்க்ரூ இருக்கு பாருங்க, அதுல ஒண்ணொண்ணா டைட் பண்ணுங்க- ஆங், அப்படித்தான், இப்ப லெப்·ட், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்,..." இப்படி, இடுப்புல கைய வெச்சுகிட்டு, சும்மா ரன்னிங் கமண்ட்டெரி கொடுத்துகிட்டே, அவன் வேல வாங்கறானே ஒழிய, ஒரு துரும்பக் கூட அசைக்கல. இதுல நடுவுல அம்மா, பேக்ரவுண்டு மியூசிக் " ரமா தம்பி ரொம்ப சுட்டி!! சரி, மச மசன்னு செய்யாதே, சீக்கிரம். இன்னும் ரெண்டு ரவுண்டு துணிங்க கிடக்கு!" என் காதுல இதெல்லாம் விழலே! கருமமே கண்ணாயினார், வில்லெடுத்த விஜயன் இப்படி என்ன அடைமொழி சொல்லி என்னைக் கூப்பிடலாம்! அத்தனை மும்மூரமா, அந்த 4 ஸ்க்ரூங்களை திருப்பிகிட்டேயிருக்கேன்; அது என்னவோ, டைட் ஆன மாதிரி தெரியல! வட்டமா இருந்த குழாய் வாயிதான், 4 ஸ்க்ரூ நடுல மாட்டிகிட்டு, ஒரு மாதிரி நெளிஞ்சு, 'ஓ' போடுது! கொஞ்சம் ஆர்வக்கோளாறிலே, அதிகமா அழுத்திட்டேன் போல! ஒரு ஸ்க்ரூ டப்னு ஒடிஞ்சு, பாதி மரையோட உள்ளயே உட்கார்ந்திருச்சு! அவ்வளவுதான், வீட்டுக்காரி கண்டு பிடிச்சுட்டா! "ஏன்ங்க, வேல தெரியலன்னா அதான் தம்பிகிட்ட கொடுக்கச்சொன்னேன்ல, ஏன் இப்படி தண்டம் வெக்கிறீங்களோ? அந்த பைப் ஹோஸ் ஜன்க்ஷன் 50 ரூபாய்". தம்பிகிட்டே திரும்பி, " என்னடா பண்றது" ன்னா. அவனும் பெரிய எக்ஸ்பர்ட் அனாலிசிஸ் பண்ற மாதிரி, சற்றே நெருங்கி உற்றுப்பார்த்துட்டு, (பைப்பத்தான், என்னை இல்ல), மேனேஜ் பண்ணீறலாம்கா; மேலயே, அப்படியே எம் சீல பூசச்சொல்லுங்க". " பாவா, மெஷின்ல வேல பார்க்குறச்சே என் கைல கொஞ்சம் அடி பட்டு இன்னும் புண் ஆறல. (ஆமாம், பெரிய ராக்கெட் லான்சர் செஞ்சான்! ஒரு சின்ன லேத் பட்டரைய சொந்தமா ஆரம்பிச்சு, அப்பப்ப என் கிட்டதான், ரா மெடீரியல் வாங்கணும், டூல்ஸ் வாங்கணும்னு சொல்லி என் ஆபீசுக்கே வந்து பணம் வாங்கிகிட்டு போற கொடுமைய எங்க சொல்ல?) நீங்களே கொஞ்சமா, ரெண்டுலயும் 50:50 கலந்து, ஒரே சிமென்ட் கலர் வர வரைக்கும் நல்லா உருட்டி, அந்த இடத்தச் சுத்தி போடுங்க!" ன்னான். சரி, நானும் சின்சியரா சப்பாத்திக்கு எப்படி மாவு பிசைவாங்களோ அந்த மாதிரி அழகா எம் சீல உருட்டி, ஜாயிண்டச் சுத்தி பத்து போடற மாதிரி போட்டுகிட்டிருந்தேன்; பின்னாலயே ரன்னிங் கமெண்டரி திரும்ப ஆரம்பம்! யாரு, திருவாளத்தான் மச்சான் மணிகண்டன் தான்!

"பாவா, கையில துணிய வெச்சு லேசா அழுத்திவிட்டு, பின்ன இன்னொரு ரவுண்டு போடுங்க, அப்பதான் நல்லா பதியும்"னான். துணி கையில, மரு கையில எம் சீல், வேல பண்றச்சயே, திடீர்னு தண்ணி பீச்சி முகரைல அடிச்சது!! நெத்தில ஆக்கர் வெச்ச மாதிரி, அந்த எம் சீல் விளம்பரத்துல வருவானே, போமன் இரானி? (முன்னாபாய் M.B.B.S ல பெரிய டாக்டரா நடிப்பாரே ஞாபகமிருக்கா?) ; [எம் சீல் போடாம, துணியால ஒழுகல மூட ட்ரை பண்ணுவான், முடியாது, உடனே பக்கத்துல இருக்குற துணிய சுத்துவான்; அப்புறம் கர்சீப், அப்புறம் கழுத்து டை; பின்ன கையில கிடைச்ச துணிய எடுத்து சுத்துவான், அது கடைசியில பக்கத்துல தரைய துடைக்கிற வேலக்காரம்மாவின் முந்தானைத் துணின்னு தெரிஞ்ச உடனே, பதறிப்போயி விலகப் போனால், அதற்குள்ளாக பொண்டாட்டி பார்த்துடுவாள், பய நொந்து நூலாயிடுவான்!] - இதே விளம்பரம் போலத்தான் நம்ம கதையும் ஆயிருச்சு!

என்னடா பிச்சுகிடுச்சுன்னு பார்த்தால், நம்ம பையலோட திருவிளையாடல்!! நானும் அப்பா போலத் திருகுறேன்னு ஸ்க்ரூ டிரைவரை எடுத்து 'நல்லா' ஒரே பக்கமா திருப்புனதுல, ஓ போட்ட பைப், ஓட்ட போட்ட பைப் ஆயிருச்சு!! மீண்டும் துடைப்பம், பக்கெட், துடைத்தல் படலம்! வேற யாரு? நான்தான்!

மச்சான், மெதுவா கழண்டுகிட்டான்.. ஒரு வழியா எல்லாத்தையும் சரி பண்ணி கடைசி பாக்கியான என் ரவுண்டு! போட்டு நிமிர்றேன், கரண்ட் போச்சு!! தனியா எடுத்து வெச்ச வெள்ளை (ஆபிசுக்கு போட்டு போற பனியன், சட்டைங்க) சொள்ளை (வீட்டுல உபயோகப்படுத்துற வேட்டி, துண்டு) எல்லாம் வெயிட்டிங்குல நிக்குது! இந்த ஆபிஸ் வெள்ளைக்கும் ஒரு கதையுண்டு!! பாடகர் கே.ஜே. யேசுதாஸ் சொன்னது! அவர் கஷ்டப் பட்ட காலத்துல, ஸ்டுதியோக்களுக்கு படை எடுக்கறப்போ, தினம் போட ஒரு சட்டைக்கு பிரச்னையா இருந்ததாம்; அப்ப நண்பர் சொன்ன யோசனைப்படி, வெள்ளைக்கு மாறிட்டாராம்!! ஒரே சட்டையை ராவோடராவா துவைச்சுப் போட்டாலும், பார்க்கறாதுக்கு, எதோ வெள்ளச் சட்ட போட்ட மதிரியும் தெரியும், பெரிய மனுஷன்னும் நெனைக்க சான்ஸ் இருக்கு! அவர் முன்னாலயே,'' பார்றா, எப்படி இருந்தவன், வெள்ளையும் சொள்ளையுமாப் போறான்'' அப்படீன்னாங்களாம்! அரசியல்வாதிங்க, பெரிய பெரிய மனுஷங்க பார்த்தீங்கன்னா, வைட் அண்ட் வைட்ஸ் தான்! அடியேனும் அப்படியே; பெரிய மனுஷன் மாதிரியும் தெரியும், யேசுதாஸ் மாதிரி நிலமைல இருந்தும் காப்பாத்தும்!! எப்படி? கரண்ட் வந்து, என் துணிங்கள ஒரு வழியா சொர்க்க வாயில் பார்க்க ...ஸாரி, மெஷின் வாயில் திணித்தேன். ரவுண்டு முடிஞ்சு துணிங்கள வெளிய எடுத்த எனக்கு ஷாக்!! எல்லாத் துணிங்களும் 16 வயசினிலே ஜானகியம்மா பாடினாப்ல "மஞ்சக்குளிச்சி அள்ளிமுடிச்சு,.. " வெளியே எட்டிப்பார்த்தன!! எனக்குத்தான் ஒரேடியா தண்ணில நனஞ்சு, காமாலை வந்துருச்சோன்னு, கண்ணக்கசக்கிப் பார்க்கிறேன்! இல்ல சத்தியமா, மஞ்சள் தான்!! எல்லா வெள்ளத்துணியும் மஞ்சளா மாறின 'மாயமென்ன, மாயமென்ன பொன்மானே'. மெதுவா, என் மாமியார் எட்டிப் பார்க்குறாங்க! "நீங்க எப்ப வந்தீங்க? இங்க என்ன எட்டிப்பார்க்கிறீங்க?"
"அதுவா மாப்ளை, பொண்ணையும் குழந்தைங்களையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சா, நான் மணிகண்டனோடையே வந்துட்டேன்; நீங்க பிஸியா இருந்தீங்களா, அதான் தொந்தரவு பண்ணல!"

"பின்ன இங்க இப்ப எதுக்கு வந்தீங்க?" "அதுவா, என் சேலை ஒண்ணு மெஷின் ஓடுதே,போடலாம்னு போட்டேன்!''

"சேலையா..~~~ எப்ப போட்டீங்க??"' பல்ஸ் இறங்கிப் போய் கேட்டேன்!
"உங்க வேல முடிஞ்சுதான்னு பார்க்க வந்தேன், அப்ப பாழாப்போன கரண்ட் வேற போச்சு. மெதுவா தட்டித் தடவி எப்படியோ போட்டேன். ஏன் ஏதும் ப்ராப்ளமா?''

என்னத்தச் சொல்ல, ''அடியே, நீதாண்டி ப்ராப்ளம்; துணியப் போடறேன்னு, ஒரு பொக்ரான் குண்டையே போட்டியேடி பாவி, உன் ரெங்கநாதன் தெருவோர சேலைக்கு என் வெள்ளைங்கதானா பலி???" என்று .... மனசுக்குள் பேசிகிட்டேன்.
( பொண்டாட்டி வந்து பார்த்தாள். நிலமை புரிஞ்சுகிட்டா அழகான ராக்ஷஸி!! அப்படியும் அவங்க அம்மாவை விட்டுக்குடுக்காமல், "ஏம்மா, உனக்கு ஏதும் வேணும்ன என்கிட்ட கேக்கக் கூடாதா? எதுக்கு அவர் கிட்ட பேச்சு?" ன்னு சொல்லி மாமியாரை க்ராஸ் ப·யரிலிருந்து மீட்டு, கூட்டிகிட்டு போயிட்டாள்! )

மெதுவாக அந்த மஞ்சக்குளிச்ச துணிங்களை வெளியில் மீட்டு, காயப்போட்டு, பக்கத்திலிருக்கிற டிரைக்ளீனரிடம் கேட்டால், "இது போகாதுசார்; ஆமா சார், சூப்பரா கலர் ஒரே மாதிரி இறங்கிருக்கே? என்ன சார் போட்டீங்க? நிறைய கஸ்டமருங்க கலர் டை பண்ணக் கேக்குறாங்க!" அப்படீன்னான்! "அதுவா, நான் புதுசா ஒரு மெஷின் வாங்கி, தொழில் தொடங்கிருக்கேன், அனுப்பி வை, கமிஷன் தரேன்!" ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்!! வேற என்ன செய்ய?

வீட்டுலயோ, பொண்டாட்டி, அப்படியே ப்ளேட்டைத் திருப்பிப் போட்டா! "யாரும் ஏதும் உள்ள போட்டாங்களான்னு ஒரு தடவ பார்த்துட்டு, வெள்ளைங்களை போடக்கூடாதா? ஒரு வேலைய எடுத்துகிட்டா சரியா செய்ய துப்பில்ல!!"

நானோ, மறுநாள் ஆபீசுக்கு எதைப்போட்டுகிட்டுப் போறதுன்னு மண்டையை உடச்சுகிட்டு, ஹைதர் காலத்துல கல்யாணத்துல கொடுத்த கலர் சட்டை, யார்யாரோ வெச்சுக் கொடுத்தது, விட்டுப் போனதுன்னு, எலி கணக்கா பெட்டியெல்லாம் குடைஞ்சு, வெளிய எடுத்தேன்!! பட்ஜட்டில் துண்டு விழுந்ததால், இந்த நிலை! அடுத்த மாசம் சம்பளம் வந்தாதான், ஒரு வெள்ளச் சட்டை வாங்க முடியும், அப்புறம் ஒண்ணு, இப்படி இந்தப் பொங்கல் போயி அடுத்த பொங்கல் வரைக்கும் அய்யாவோட வெள்ளை வாங்கும் படலம் இழுத்தால்தான், அதுக்கு அடுத்த வருஷமாவது, மீண்டும் வெள்ளையும் சொள்ளையுமாய் போகமுடியும்!!

சரி, சனியன் ஒரு ஞாயிற்றுக்கிழமையோட முடிஞ்சுதா? அதான் இல்லை! மறுநாள் ஆபிசுல அவனவன் புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறான்! ப்யூன் வேதாசலம் "சார், ஷோக்கா கீரிங்க சார்! இன்னா சார், புதுசா ஏதும் கனெக்ட் பண்றயா" ன்னு என்னப் பார்த்து கண்ணடிக்கிறான் பாவி!

வீட்டுக்கு திரும்பும் சந்து முனையில் உள்ள ஆட்டோ டிரைவர், வருஷா வருஷம் சபரிமலைக்கு போறவன்" சாமி, புது சொக்கால்லாம் போடறேங்க, நாங்க மலைக்கு போறம்னா மட்டும் எதும் டொனேஷன் கேட்டா தரமாட்டீங்கறியே" அப்படீன்னான்.

"எது கொடுத்தாலும் வாங்கிப்பியா?" "ஏன் சாமி, தா சாமி!" நேரா வீட்டுக்குள் போனேன், நேற்று மலர்ந்த (நொந்த) மஞ்சள் சட்டைங்களை, வேட்டிங்களை அவன் கிட்ட கொடுத்து, "இல்லாத சாமிமாருக்கு கொடுத்துடுப்பா" !

"சரி சாமி!" - வாங்கிக்கொண்டான்!!

சனியன் தொலைந்த சந்தோஷத்தில் "சாமியே சரணம் ஐயப்பா!" என்று கூவினதைக் கேட்டு, என்னமோ ஏதோன்னு பயந்து வாசலுக்கு ஓடி வந்தார்கள் என் மாமியாரும், அருமை மனைவி, மக்களும்!!

இம்மொபைல் ஆக்கும் மொபைல்!

மனுஷனுக்கு எது இன்றியமையாததோ தெரியாது, இப்ப 'மொபைல் இல்லாதார் வாழ்க்கை, இருந்தும் இல்லாதான் வாழ்க்கை' போலத்தான்!எங்கும் சிவமயம் போயி இப்ப எங்கும் 'செல்'மயம்!கற்றோர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இப்ப 'செல்'லிருக்கும் இடமெல்லாம் 'செல்வாக்கு' இருக்குது!அப்பவே ஜோசியன் சொன்னான்.'செல்' லு போக பாக்கியிருப்பு - ன்னு!
இப்பதான் பிள்ளைங்களுக்கு செல்லு வாங்கிக் கொடுத்த அப்பனுக்கெல்லாம் புரியுது, பில் கட்றப்ப 'செல்' போக பாக்கிதான் (கைல) இருப்புன்னு!

மொபைல் உபத்திரவங்கள்:

சட்டை பையில வெக்கலாம்னா, ஹார்ட் அட்டாக் வரும்கிறானுங்க! சரி, பாண்ட் பாக்கெட்ல வெக்கலாம்னா, ஆண்மை குறைஞ்சுடும்னு பயமுறுத்துறாங்க! பின்னர் சொன்ன செய்தி மட்டும் நெஜம்னா, குடும்ப கட்டுப்பாட்டுத் துறை எல்லா லாரி டிரைவருக்கும் இலவச மொபைல் வழங்கலாம்! எயிட்ஸ்ஸாவது குறையும்!

மொபைல் வெச்சிருக்கிற பொண்ணுங்க பாடு, அதைவிட மோசம். சேல கட்றவங்க இடுப்புல சொருக முடியாது! சல்வார் கமீஸ் போடறவங்க நிலைமை கேக்கவே வேணாம்!
பார்த்தா, கழுத்துல தாலிய விட ஜெகத்ஜோதியா ஒரு நாடால கட்டி தொங்கப் போட்டு போவங்க, இல்ல சின்ன சைஸ் பைக்குள்ள மொபை(ய)ல உக்காரவெச்சு, மெடல் மாதிரி தொங்க விடுவாங்க!
தொங்க விடறதுன்னதும் வேற ஒரு மேட்டர் ஞாபகம் வருது! இந்த கம்ப்யூடர், ஸா·ப்ட்வேர், அக்குவேர், ஆணிவேர் கம்பெனியெல்லாம் இப்ப, ID Card ங்குற பேர்ல, நம்பர் ப்ளேட் மாதிரி எல்லார் கழுத்துலயும் மாட்டீடறாங்க! வேல பண்றவங்களாவது, வேல முடிஞ்சு வெளிய வரப்ப, இந்த கழுத்து பட்டயை கழட்டி வெச்சுறலாம்ல? அவங்கள பார்க்கறப்ப எதோ நம்பர் போட்ட கைதிகளாவோ, இல்ல வேற கழுத்துப் பட்டை போடற நாலு கால் ஜந்துக்களையோ நினைக்கத் தோணுது!
சரி, திரும்ப மொபைலுக்கே வருவோம்....
சில சுவாரஸ்யமான செல்லுபுராணம் பாப்போமா?
1. இப்பதான் திடீர்னு சிவபெருமானுக்கு ஜலதோஷம் sorry ப்ரதோஷம்கிற சாக்குல திடீர்னு ஒரு அலை அடிச்சிருக்கே! அதனால கோயில் வாசல்ல நல்ல கூட்டம். பூக்கடைல பூ வாங்க கையை நீட்டுனவன், நீட்டிகிட்டேயிருக்கேன். மறுபக்கம் பூக்காரம்மா 'செல்'லுல சும்மா 'பூந்து வெளாடராங்க! யாருக்கோ பிசினெஸ் (Nack) நெளிவு சுளிவெல்லாம் சொல்லிகொடுத்துகிட்டு இருக்காங்க. பலர் கை நீட்டிகிட்டிருந்தாலும், அவங்க அட்வைஸ் தொடருது! நடுல மறு கையை 'போ, போ' ங்கிற மாதிரி வீசுறாங்க! ஆனா பேச்சு மட்டும் மொபைல்ல தொடருது! சுத்தி நிக்கிற கஸ்டமருக்கெல்லாம் ரொம்ப அவமானமாப் போச்சு! ' என்னடா பூ வாங்க வந்தா, விரட்டுறாங்களேன்னு! பேச்சு முடிஞ்சதும், பூக்காரம்மா போட்டாங்களே ஒரு போடு! 'ஏன்யா, மாடு சைடுல தலைய விட்டு பூவ திங்குது; நீ பாட்டுக்கும் நிக்குறயே? மாட விரட்டக் கூடாது? நாந்தான், முக்கிய மேட்டர் பேசிகிட்டிருக்கேன்ல' - இது எப்படியிருக்கு!!
2. ரெகுலரா பார்க்ல வாக்கிங் வர நண்பர் ரெண்டு நாளா மிஸ்ஸிங்! மறுநாள், அவர மார்கெட்ல பார்த்தேன்! எதையோ பறி கொடுத்த மாதிரி அவர் முகம்! 'என்ன மணிகண்டா, ரெண்டு நாளா காணலை? ஏன் டல்லாயிருக்கே?' மணிகண்டன் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, 'சார், நீங்க நல்ல ப்ரெண்டுங்கிறதால சொல்றேன், வெளிய சொல்லீறமாட்டீங்களே?' என்ற பீடிகை போட்டுச் சொன்னதைக் கேட்டு, சிரிப்பதா, அவருக்காக வருத்தப்படுவதா தெரியவில்லை!!சார் நான் பா·ரின் கம்பெனியின் இந்திய மார்கெட்டிங் ரெப் என்று உங்களுக்குத் தெரியும்; நிறைய டார்கெட்! ப்ரெஷர்! மொபைல் தான் சார் என் மூச்சுக் குழாயே! இப்ப அதுதான் எனக்கு எமனா வந்து நிக்குது!
நான் - என்னப்பாயிது,மார்கெட்டிங் ஆளுக்கு மொபைல் இல்லாம ஆகுமா?மணி- "அட அதுதான் சார் ப்ராப்ளமே! ஒரு ப்ரேசில் பார்ட்டிக்கு பொருள் இந்தியாவிலிருந்து சப்ளை செய்ய என் கம்பெனி விலையெல்லாம் பேசி முடிச்சிடுச்சி. பா·க்டரி விசிட்டுக்கு ஒரு ஆளை ப்ரேசில் பார்ட்டி அனுப்பியிருந்தாங்க. அவர் ப்ரொடக்ஷன் எல்லாம் பார்த்துட்டு, ஒரே ஒரு புது மெஷினும் சேர்த்தா வேலை வேகமா ஆகும்னு ரிப்போர்ட் எழுதி வெச்சுட்டாரு! அதுக்கு நேர கெடுவும் வெச்சிட்டாரு! 2 நாள்! உடனே என் கம்பெனில பேசி, மெஷின் சப்ளையர்கிட்ட பேசி, பேரம் முடிச்சு, எல்லாம் மொபைல்லயே கோஆர்டினேட் பண்ணேன் சார். மெஷின் சப்ளையர், ப்ரேசில் பார்ட்டி, நான் எல்லாரும் ஒரு ஹோட்டல் லாபில பேப்பர்ஸ் ஸைன் பண்ண வைட் பண்றோம்; பை·னல் ஓகே மட்டும் என் கம்பெனி ப்ரெசிடெண்ட் பண்றதுதான் பாக்கி.
அப்ப பார்த்து பாழாப் போன எனக்கு 'நம்பர் ஒன்' வந்திருச்சு! பாத் ரூம்ல ஒரு கைல 'மொபைல் - செல் மணி'; இன்னொரு கைல 'ஒன்' மணி! ரொம்ப வெவரமா, ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ரிங்கிங் டோன் வெச்சிருந்து என்ன ப்ரயோஜனம்? பாஸ் கூப்ட நேரம் பார்த்து, வலது கை செல்லை காதுக்கு தூக்கி பதில் சொல்றதுக்கு பதிலா, (இடது கைப் பழக்கம் உள்ளவர்) இடது கையைத் தூக்கிட்டேன்! மூஞ்சியெல்லாம் 'மூச்சா!' பெல் அடிச்சுகிட்டேயிருக்கு! கண்ணெல்லாம் தண்ணி! மறுகைல இருக்கிற செல்ல உயர்த்தறப்போ, பதட்டத்துல, மொபைலை டாய்லெட்ல தவற விட்டுட்டேன்! ப்ளூ டூத் - ரொம்ப Hi-Fi மொபைல் வேறே! தண்ணுக்குள்ளேயிருந்தும் மணி அடுச்சிகிட்டேயிருந்துச்சு! கைய விடலாம்னு பார்த்தா, அது கரெக்டா, சக்ஷன் U பெண்ட்ல மாட்டிகிருச்சி! வெளிய வரல! கைய அசிங்கப்படுத்தினதுதான் மிச்சம்!! பாழாப் போன் செல் பழக்கம் ; எல்லா அட்ரஸ், போன் நம்பர், அதுலதான் ஸ்டோர் பண்ணி வெச்சேன்! வெளிய வந்து, பப்ளிக் பூத்லயிருந்து USக்கு போன் போட்டா, கனெக்ட் ஆகமாட்டேன்னுது! அவசரமா, லேப்டாப் திறந்து, நெட் கனெக்ட் பண்ணி, யாஹ¥ Chat ல தலைவரோட பேசிட்டேன். ப்ரேசில் வேல முடிஞ்சாலும், அங்க US ல தலைவர் என்ன நெனச்சாரோ தெரியல!
வார்னிங் மெயில் ஒண்ணு அனுப்பி, சம்பளத்துலயும் 10% வரும் மாசத்துலயிருந்து பிடிச்சு, அதோட போன் செலவுக்குன்னு தர தொகையையும் கட் பண்ணி, பட்டயம் எழுதிட்டாரு! எரியற அடுப்புல எண்ணைய விட்ட மாதிரி, எல்லா கஸ்டமர் நம்பர், சப்ளையர் நம்பர் எல்லாம், பாத் ரூம் ப்ளஷ் தண்ணியோட போயிருச்சு! அதெல்லாம் எப்படி திரும்ப சேக்கறதுன்னே தெரியல!" பின்னர் மெதுவாக - 'சார், மொபைல 'மூச்சா' போற இடத்துல விட்டேன்னு தெரிஞ்சா, எல்லாம் சிரிப்பாங்க! என் பொண்டாட்டிகிட்ட கூட, எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டான்னு சொல்லிட்டேன்! அவளுக்கு நிஜம் தெரிஞ்சா, கேலி பண்ணியே கொன்னுடுவா!" என்றார், பரிதாபமாக! என்னத்தச் சொல்ல!
3. க்ளினிக்ல பார்த்தது - ஒரு ஆளு, ஒரு பக்கமா தலைய சாய்ச்சுகிட்டே வந்தாரு.ரிஷப்ஷன் பெண்மணி : பேரு?சா.ம (ஹி,ஹி.. சாய்ந்த மனிதர்!) : ர்ர்ர்ரவிரிஷ: என்ன?சா.ம: ர்ர்ர்ரவி. (மேற்கொண்டு பேச முடியவில்லை! வாயில் ஜொள் வடிகிறது!) உடன் வந்த பெண் சொன்னார்: மொபைல்ல பேசி, பேசியே, இந்தாளு இப்படி ஆயிட்டாரு சார்!நான்: என்னது மொபைல்னாலயா? (முக்கை நுழைப்பது தப்புதான். என்ன செய்ய? ஆர்வக் கோளாறு!)
பெண்: 'ஆமா, சார், இந்த ஷேர் மார்கெட், மூசுவல் ப·ண்ட், அது இதுன்னு திரிவாரு! எந்நேரமும் போன், இல்லைன்னா, இண்டெர்நெட்! கொஞ்சம் காசு பார்த்துட்டாரு! பிடிச்சுருச்சு சனியன்! வெளில எங்கயானும் கூப்டா, 'இல்ல வரல' ம்பாரு; நல்லது கெட்டது எதுனாலும் நாந்தான் போகணும். இவரு எந்நேரமும், காத சாய்ச்சுப் பேசிகிட்டேயிருப்பாரு! ஒரு நாள் என்னிக்கி இல்லாத அதிசயமா என்னையும் வெளில கூப்டாரு! சரின்னு வண்டில பின்னால உட்கார்ந்தேன்! கொஞ்ச தூரம் தான். ஒரு போ·ன் வந்திச்சு! போச்சு! அப்படியே, வண்டிய ஓரம் கட்டி, நின்னு பேசுனாரு, பேசுனாரு, பேசிகிட்டேயிருந்தாரு! கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்! பின்ன மெதுவா நினைவுக்கு வந்து, ' என்ன ராஜி, லேட் ஆயிருச்சான்னாரு! ஹி, ஹி'ன்னரு! 'எனக்கெப்படிங்க தெரியும், எங்க கூட்டிகிட்டு போறேன்னு?' லேட்டா, சீக்கிரமான்னு, நீங்கதான் சொல்லணும்' னேன்.கடிகாரத்தப் பார்த்தார் - 'சரி,லேட் ஆயிருச்சு, வீட்டுக்கே போகலாம்' கிறார்! ஏன்? 'ஷேர் மார்கெட், க்லோஸிங் டைம்! அப்படியே நெட்ல உட்கார்ந்தா கொஞ்சம் காசு பாத்துறலாம்'."அன்னிக்கி முடிவு பண்ணேன்; இவரோட வெளியவே போக்கூடாதுன்னு! இது முத்திப்போயி, இப்படி நிக்கிறாரு! முதல்ல, கொஞ்சம் கழுத்து வலி, எதாச்சும் தேய்ச்சுவிடேன்' ன்னாரு; அப்புறம், கொஞ்சம் 'Stiff neck' அதுவே சரி ஆயிரும்னாரு. அப்புறம், வாய் இழுத்துகிச்சு!இப்ப, இப்படி, எல்லாரையும் கோணலாவே பார்க்கிற மாதிரி ஆக்கிட்டான் ஆண்டவன்!"மெல்ல விசும்பி, அதுவே பெரிய அழுகையாய் வெடித்தது!
கேட்கவே பரிதாபமாக இருந்தது! அதைவிடப் பரிதாபம், அந்த ஆள் நிக்கிற போஸ்! சந்தேகமா ஏட்டைய்யா பார்க்கிற மாதிரி! ஒரு டிக்ரியா சாஞ்சு பார்த்துகிட்டிருக்கார்!
4. சமீபத்தில் மறைந்த அப்பாவின் மாதாந்திர திதி- புரோகிதருக்காக காலைல ஆபீஸில் 1 ஹவர் பர்மிஷன் போட்டு, ' தேவுடு' காத்திக்கொண்டிருந்தோம்! மணி பதினொண்ணு ஆகியும் வரலை! இங்கே அண்ணனுக்கும், அவரைப் பார்த்து எனக்கும் டென்ஷன்! விடாத மழை வேற! 11.30 க்கு அய்யர் மெதுவாக வர்றார்! நாங்கள் வாயைத் திறப்பதற்குள், '' அது வந்துண்ணா, மழைல மொபைல் நனஞ்சுடுத்து! சார்ஜும் ஆக மாட்டேங்கறது! உங்க நம்பர் மட்டும் இல்ல, எல்லார் நம்பரும் இதுலதான் இருந்தது! எல்லாம் போச்சு!" என்கிறார்!போன ஆத்மாவின் வேல நல்லா நடக்கணும்னு, பொறுத்துகிட்டோம்; இதே ஆபீஸா இருந்தா, இப்படி சாக்கு சொல்ல முடியுமா?
5. பையன் அப்பாகிட்ட: "யப்பா, பிறந்த நாளுக்கு இந்த சின்ன சின்ன கி·ப்ட் எல்லாம் வாங்கித் தந்து என்னை இன்சல்ட் செய்யாதீங்கப்பா! அட்லீஸ்ட் ஒரு நோக்கீயா 1100 மாடலாச்சும் வாங்கிக் குடுப்பா, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!"
பையன்? காலேஜ்னு நெனச்சா, அது உங்க தப்பு. இப்பதான், ப்ரி-நர்சரியிலிருந்து, ஒண்ணாங்கிளாஸ் போறான்!இப்படியே போச்சுன்னா, வருங்காலத்துல, வயிற்றுக்குள் குழந்தையை ஸ்கான் பண்ணிப் பார்க்கறப்ப, முதுகெலும்பும்போடு கழுத்தெழும்பு திரும்பும் இடம், ஒரு திரும்பு திரும்பி, ஒரு 20 டிக்ரி கோணலா உருவாயிருக்கும்! பரிணாம வளர்ச்சி!!
6. மற்றொரு கேஸ் அதைவிட ஆபத்தானது! புது மாப்பிள்ளை! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கூப்பிடறான்னு, ஒரு கைல பைக் ஓட்டிகிட்டே, மறுகையால மொபைல் பேசியிருக்கார்! இருட்டில் கவனிக்காம, பின் லைட் ஆன் செய்யாம நின்ன லாரிமேல் மோதி, 'V'பத்து!இப்ப V ஷேப்ல பாண்டேஜ், தலைல காய்ச்சல் குறைய பத்து - ரெண்டும் போட்டு, அய்யா கல்யாணம் தள்ளிப் போயிருச்சு!
நல்ல வேளை அடி, ஆஸ்பத்திரியோட போச்சு! இத மாதிரி மொபைல் பேசிகிட்டே, ரெயில்வே லைன் க்ராஸ் பண்ண ரெண்டு இள வயது பொண்ணுங்க மேல போயி சேர்ந்த கதை பேப்பரில் படிச்ச அன்னிக்கி, வயத்துல சோறே இறங்கல!
சில மொபைல் பைத்தியங்கள்..
ரொம்ப முத்தின கேசுலேர்ந்து ஆ..ரம்பிப்போம்!
7) அட்வான்ஸ்டா, காதுல கடுக்கண் சைசுல, ஒரு பட்டனைச் சொருகிகிட்டு, தானா பேசிகிட்டே போவானுங்க! கேட்டால், 'Hands free' ம்பானுங்க! பாதி விபத்துக்கள், இந்த 'Hands free' கேசுங்களாலதான்!!
8) சில வசதியானவங்க, அதுலயே, பாட்டு, கேமரா, மெயில், எல்லாம் இருக்கிறமாதிரி வாங்குறாங்க! எனக்குப் புரியல! பாட்டு கேட்க, சிம்பிளா, சைனாக்காரன் விக்கிற 50/- ரூ FM ரேடியோ போதுமே? கேமரால என்ன, பெரிய கலை ஓவியமா எடுக்கப் போறானுங்க? எல்லாம் கலைஞ்ச ஓவியம்தான்! அதான், ஒரு டெல்லி ஸ்கூல் பையனும்,பொண்ணும் மாட்டிகிட்டாங்களே! ஸ்கூல் பேரே நாறிடிச்சு! மற்ற வகையராக்களை சொல்லவே வேண்டாம்; செல்போன்ல மெயில் படிக்க நெஜமாலுமே வசதிப்படுமா? சந்தேகம்தான்! திருடு போனாலும், ரொம்ப விலையுள்ளதாலே, வயித்தெரிச்சல்தான், மிச்சம்!
9) சில இளவட்டங்கள், மெதுவா,எதோ பேசிகிட்டேயிருப்பாங்க. நடு நடுவே, நினைவு வந்து, நம்ம சொல்ற வேலையெல்லாஞ் செய்வாங்க! செல் பேசுற காலேஜ் பொண்ணுகிட்ட எதேனும் வேல சொல்லிப்பாருங்க? தமாஷ¤!
பக்கத்து வீட்ல கொஞ்சம் சரியா கண் தெரியாத பெரியவர் - சாப்பிட உக்கார்ந்துட்டு பேத்திகிட்ட தெரியாத்தனமா மோர் ஊத்தச் சொன்னாரு. அவளும் பேச்சு சுவாரஸ்யத்துல, ஊத்துறா, ஊத்துறா ஊத்திகிட்டே இருக்கா! தட்டு நெறம்பி,மோர் கீழ ஓடிக்கிட்டிருக்கு! தாத்தாவுக்கோ கண் தெரியாதா, அவரும் தட்டுல கைய அளைஞ்சு, அளைஞ்சு, ரொம்பிப்போன மோருக்குள்ள சோத்துப் பருக்கைய தேடுறாரு! சந்தேகம் வந்து, 'அம்மா, அம்மா, பவானி, ரொம்ப மோர் ஊத்திட்ட போல; போதும்மா" ங்கறார். ஊஹ¤ம், பவானி கேட்டாதானே? No more, more ன்னு தாத்தா சொல்லச் சொல்ல இங்கே மோர் ப்ரவாகமெடுத்து ஓடுது!!
10) கொஞ்சம் எகானமி ரேஞ்ச் கேசுங்களும் இருக்கு. பார்த்தீங்கன்னா, ரத்தக் கண்ணீர் எம்.ஆர். ராதா மாதிரி ஆகிப்போன கைகள், குனிந்த நன்நடைன்னு நடப்பாங்க! நாமதான் பார்த்து போகணும். இல்லன்னா நேரா நெட்டுக்குத்தா ('Head-on Collision') மோத வாய்ப்பிருக்கு! காரணம், வேறொண்ணுமில்லை! SMS ன்னு ஒண்ண இந்த மொபைல்காரங்க கண்டுபிடிச்சான் பாருங்க, பெரிய வேதனை! எப்பப் பாரு, அதக் குத்திகிட்டே இருப்பாங்க; பதில் வந்ததும், 'குணா' கமலஹாசன் ரேஞ்சுக்கு பரவசமாகி, உடன் பதில் போடுவாங்க! சிலர் இதுல ரொம்ப 'கை' தேர்ந்த பார்ட்டிங்க!
கீயக் குத்துற வேகம் பார்த்தீங்கன்னா சும்மா டைப்ரைட்டிங் ஹையர் தோத்துப்போற மாதிரி ஸ்பீடா அடிப்பாங்க! 'கீ'க்கு வாய் இருந்தா, 'கீ', 'கீ' ன்னு கத்தும்! மொபைல் கம்பெனிக்காரங்க பல இளவட்டங்கள மடக்கிப்போடுறதே, இந்த இலவச SMS கொடுத்துதான்!
11) வயசான அம்மா தனியா வெளிய போயிருந்தாங்கன்னா, எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க, ஒரு மொபைல வாங்கிக் கொடுத்தோம். அட்லீஸ்ட் ஒரு பட்டனை அமுக்கி பதில் சொல்லறதுக்கு; என்ன ஆச்சுன்னா, ஆர்வக் கோளாறுல, அம்மா,சும்மா 'பூந்து' விளையாடிட்டாங்க! அப்பப்ப, பெரிய பதவியில் உள்ள மாமா, டார்கெட், பாலன்ஸ் ஷீட், அது, இதுன்னு மண்டை உடைச்சுக்கிற அக்கா, ஷேர் மார்கெட் எக்ஸ்சேஞ்சின் ப்ரெஸிடென்ட் மாப்பிள்ளை, எக்ஸ்போர்ட் டெட்லைன் தினம் தினம் கண்காணிக்க வேண்டிய அடியேன் போன்றோருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு அரை டஜன் வெத்து SMSகளும், Missed Calls ம் வந்து டார்ச்சர் செய்ததன் பலன் - அதிரடியான 'சூடான' பில்லும், அம்மா ஞான உபதேசம் செஞ்சதும் தான்! "போடா, இத்தன நாள் வெளிய போகலையா, வரலையா? நாங்கள்லாம், வெறும் டெலிபோனே பார்க்காமலே இத்தன நாள் ஓட்டலையாக்கும் " என்று சொல்லி, மொபைலை புறம் ஒதுக்கிட்டாங்க!
சரி, இத்தன சொல்றானே, இவன் மொபைல் வெச்சிருக்கானான்னு கேக்குறீங்களா? என்ன பண்றது, என்னால முடிஞ்சவரை, 'ஊரோட ஒத்து வாழறேன்!' ஆனா, அதுல கம்பெனி வேல நிமித்தம், ஒரு சில SMS மற்றும் போன் போடமுடியாம, நம்ம கஸ்டமரோட, இல்ல சப்ளையரோட தலை கிட்ட பேச வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தான், இந்த பாழாப் போன மொபைல் போ·ன கையில் எடுக்கறேன்! என்ன சரிதானே? ஸாரி, நம்ம பார்ட்ஸ் சப்ளையர் ஒருத்தர்கிட்டயிருந்து 'செல்'லுல கால் வருது! நம்ம அப்புறம் பேசலாம். பின்னூட்டம் தானே, எங்க போயிறப்போகுது? கட்!